×

நெல்லையில் 8 பேருக்கு கொரோனா

நெல்லை, ஜன. 11: நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 7 பேர் மாநகர பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாநகர அளவில் என்ஜிஓ ஏ காலனி, தியாகராஜநகர், கோட்டூர் ரோடு, அண்ணாநகர், சந்திப்பு திலக் நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவி உள்ளது. அண்ணாநகரில் மட்டும் 3 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மாவட்ட அளவில் அம்பை வட்டாரத்தில் பிரம்மதேசம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிற வட்டாரங்களில் நேற்று கொரோனா பரவல் இல்லை.

Tags : Corona ,Nellai ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...