×

நெல்லை அருகே வேன் கவிழ்ந்து விபத்து 15க்கும் மேற்பட்டோர் காயம்

நெல்லை, ஜன.11: சேரன்மகாதேவி அருகே வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசல் கிராமத்தை சேர்ந்த 26 பேர் நேற்று ஒரு வேனில் பாபநாசம் சிவன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வழிபாட்டை முடித்த பின்னர் அவர்கள் மாலையில் அதே வேனில் எஸ்.என்.பள்ளிவாலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சேரன்மகாதேவியை கடந்து களக்காடு சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்கே வரவே கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உதயகுமார் மற்றும் வேனில் பயணம் செய்த கிருஷ்ணவேனி, லட்சுமி, பட்டத்தாய், ராஜலட்சுமி, மாலா, சசிகலா, தினேஷ்குமார், முருகன், விஜிலா உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிறு காயமடைந்தவர்கள் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்தவர்களை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!