திருத்துறைப்பூண்டி, ஜன.11: திருத்துறைபூண்டி அருகே வேளூர் கிராமத்தில் உள்ள தெற்கு வீதி சாலை சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலை மிகவும் சேதம் அடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகனஓட்டிகள் பாதையை கடக்க பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.