×

போதைப்பொருள் கடத்தல் இந்தியா-மியான்மர் எல்லையில் ஈடி சோதனை

புதுடெல்லி: மிசோரம் போலீசார் ரூ.1.41கோடி மதிப்புள்ள 4.72கோடி ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிசோரமில் உள்ள ஐஸ்வால் மற்றும் சம்பாய், அசாமில் உள்ள பூமி குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இடங்களில் ஈடி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது ரூ.35லட்சம் ரொக்கம் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா-மியான்மர் எல்லையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Myanmar border ,New Delhi ,Mizoram police ,Mizoram ,
× RELATED கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்...