×

ெபரம்பலூரில் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்தி தமிழ்வழி கல்வி இயக்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜன.11:பெரம் பலூரில் அரசு கோயில்க ளில் தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்தி தமிழ்வழிக்கல்வி இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில், தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்தி நேற்று தமிழ்வழி கல்வி இயக்கம் சார்பாக பெரம்பலூர் பெருமாள் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்வழிக்கல்வி இயக்க பாவலர் தேனரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சியை சேர்ந்த செல்வமணியன் உள்ளிட்ட பலர் பேசினர்.திராவிடர் கழக நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், மக்கள் உரிமை கூட்டியக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது, மார்க்சிஸ்ட். கம்யூனிஸ்ட்கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,temples ,Perambalur ,Tamil Way Education Movement ,Tamil ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு