×

பள்ளி ேமலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

பெரம்பலூர்,ஜன.11:பள்ளி மேலாண்மைக்குழு உறுப் பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வடக்குமாதேவி ஊ.ஒ.தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்தது.இதில் 20 ேபர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப் பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி, பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியில் பள்ளியின் மேலா ண்மைக்குழு உறுப்பினர்கள் 20பேர் கலந்து கொண்டனர். பயிற்சியை பள்ளி தலைமையாசிரியர் சசிநர்மதா தலைமை வகித்து துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். பயிற்சியில் இலவச, கட்டாயக் கல்வி, வயது வந்தோர்கல்வி, பள்ளிசுகாதாரம், கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு வீடியோ படக்காட்சிகள் காண்பிக்கப்பட்டது. பயிற்சிக்கு கருத்தாளராக உஸ்மான் அலி ஆசிரியர் செயல்பட்டார். பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார் வையாளர் தேவகி, ஆசிரியர் பயிற்றுநர் பாலசுப்பிரமணி ஆகியோர் பார்வை யிட்டனர். பயிற்சி முடிவில் ஆசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.

Tags : school management team members ,
× RELATED பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி