×

வேதாரண்யம் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

வேதாரண்யம், ஜன.11: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோயில் பிரகாரத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோயில், வடமறைக்காடர் கோயில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோயில், கோடியக்காடு குழவர் கோயில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோயில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோயில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோயில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோயில், அகரம் அழகியநாதர் கோயில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோயில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோமநாதர் கோயில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோயில், கத்தரிப்புலம் கோயில்குத்தகை காசிநாதர் கோயில் ஆகிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Tags : area ,Vedaranyam ,Shiva ,temples ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்