×

பதிவு செய்ய அழைப்பு கரூர் வாங்கலில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், ஜன.11: கரூர் வாங்கல் சாலையில் பாலம்மாள்புரம், அரசு காலனி போன்ற பல்வேறு பகுதிகளில் சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. ஒரு சில பகுதிகளில் மட்டும் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்வதற்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சில பகுதிகளில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : completion ,road ,Karur Vangal ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா