×

கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு

கரூர், ஜன. 11: கரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுசாமிபுரம் பகுதியோரம் குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. கரூர் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால், நகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் மொத்தமாக கொட்டி வைத்து அதனை எரிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் நகராட்சி பகுதியில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குப்பைகளை எரிப்பது குறித்து கண்காணித்து தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Karur Velusamypuram ,
× RELATED வாட்டி வதைக்கும்...