ஈரோடு, ஜன. 11: ஈரோடு காளை மாட்டு சிலை அருகே இந்திய தேசிய லீக் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். இதில், புதிய வேளாண் சட்டத்தை கண்டித்தும், இச்சட்டத்தை இயற்றிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.