ஈரோடு,ஜன.11: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு திடீரென இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியும், சாக்கடை நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதேபோல், ஈரோட்டின் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதில், மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம்: ஈரோடு- 11மி.மீ (மில்லி மீட்டர்), பெருந்துறை-16, கோபி-5, நம்பியூர்-3, எலந்தகுட்டை மேடு-1 என மொத்தம் 37.80 மி.மீ., மழை பொழிந்தது.