சாத்தூர், ஜன.11: சாத்தூரில் மதிமுக நகர,ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் மதிமுக நகர செயலாளர் கணேஷ்குமார் தலைமையில், யூனியன் துணைத்தலைவர் செல்லத்தாய் குணசேகரன்,ஒன்றிய கவுன்சிலர் சூடிக்கொடுத்தாள்ராஜமோகன் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மாநில இலக்கிய அணி பொருளாளர் கண்ணன், தலைமைகழக பேச்சாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.