×

காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண் பொதுமக்களிடம் மனு பெற்றார்

சென்னை, நவ.27: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில், பொதுமக்கள் 18 பேரிடம் நேரடியாக போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர்வு முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 18 பேரிடம் தனித்தனியாக மனுக்கள் பெற்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புகார் மனுக்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது சென்னை காவல்துறை தலைமையிட துணை கமிஷனர் கீதா உடனிருந்தார்.

Tags : Police Commissioner ,Arun ,Police Commissioner's Office ,Chennai ,Chennai Police Commissioner's Office ,
× RELATED ரியல் எஸ்டேட் அதிபரின் கார் பறித்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது