×

ராஜபாளையம் அருகே 3 வயது சிறுமிக்கு தொல்லை 55 வயது முதியவர் கைது

ராஜபாளையம், ஜன. 11: ராஜபாளையம் அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம்பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(55). இவர் நேற்று முன்தினம் 3 வயது சிறுமிக்கு பாலியர் டார்ச்சர் கொடுத்தார். இதுகுறித்து தேவதானம் ஊர்பொதுமக்கள் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் ராஜபாளையம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!