×

காரியாபட்டியில் திறப்பு விழா காணாத ஆவின் பாலக கட்டிடம்: சமூக விரோதிகள் தஞ்சம்

காரியாபட்டி, ஜன. 11: காரியாபட்டியில் அருப்புக்கோட்டை - மதுரை மெயின் ரோட்டில் செவல்பட்டி அருகே பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் பால்வளத்துறையில் உற்பத்தி செய்யப்படும் பால், நெய், வெண்ணெய் உட்பட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்வதோடு இப்பகுதியில் உள்ள சிறிய ஆவின் பாலத்திற்கு மொத்த சப்ளை செய்யும் இடமாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகம் ஒன்றரை வருடத்திற்கு மேலாகியும் திறப்புவிழா காணாமல் புதர் மண்டி பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, அரசு நிதியை வீணடிக்காமல் ஆவின் பாலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Avin Palaka Building ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...