×

உத்தமபாளையம் அருகே 18ம் கால்வாயில் கூலித்தொழிலாளி மர்மச்சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு

உத்தமபாளையம், ஜன. 11: உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டியில் உள்ள 18ம் கால்வாயில் மர்மமாக இறந்து கிடந்த கூலித்தொழிலாளியில் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி சாஸ்தாகோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (47), கூலித்தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாததால், அவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த 27ம் தேதி, வீட்டிலிருந்து சென்றவர் மீண்டூ ம் வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர மற்றும் உறவினர்களுக்கும் பல இடங்களில் தேடியும், அவரை கானவில்லை.  இந்த நிலையில் அனுமந்தன்பட்டி-க.புதுப்பட்டி 18ம் கால்வாய், தண்ணீரில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக, உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அழுகிய நிலையில் இளங்கோவன் சடலமாக, கிடந்தார். உறவினர்கள் மற்றும் மனைவி ரம்யா உடலை பார்த்து இளங்கோவன் என உறுதிபடுத்தினர். மேலும், அடையாளங்கள் அடிப்படையில் இறந்து கிடந்தது இளங்கோவன் என உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அழுகிய நிலையில் கிடந்த இளங்கோவன் உடலை மீட்ட உத்தமபாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோவன் எப்படி இறந்தார் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : canal ,Uththamapalaiyam ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்