×

பிரதோஷ வழிபாடு

தேவதானப்பட்டி, ஜன. 11: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆகிய சுவாமிகளுக்கு மஞ்சள் பொடி, திருமஞ்சன திரவியம், மாபொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு