×

வாடிப்பட்டி அருகே சோதனை சாவடிக்குள் புகுந்த லாரி உயிர் தப்பிய போலீசார்

வாடிப்பட்டி, ஜன.11: வாடிப்பட்டி அருகே போலீஸ் சோதனைச் சாவடிக்குள் லாரி புகுந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர்தப்பினர். மதுரை மாவட்டத்தின் எல்லை பகுதியான பாண்டியராஜபுரத்தில் வாடிப்பட்டி காவல் நிலையம் சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சோதனைச் சாவடியில் எஸ்.ஐ பழனி மற்றும் சிறப்பு எஸ்.ஐ வாண்டையார் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்காட்டிலிருந்து விருதுநகருக்கு கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சோதனைச் சாவடிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் ஒரு டூவீலர் மற்றும் சோதனைச் சாவடி இயங்கி வந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த சாத்தூரைச் சேர்ந்த ராஜகோபால் (71) என்பவரை கைது செய்து, வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry ,Vadippatti ,checkpoint ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி