×

புகையிலை விளைச்சல் வாடிப்பட்டியில் அமோகம்

சின்னாளபட்டி, ஜன. 11: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கரிசல் பூமியான கோனூர், கரிசல்பட்டி, கொத்தப்புள்ளி, தோப்புப்பட்டி, அழகுபட்டி, தாதங்கோட்டை, அம்மாபட்டி, எஸ்.வாடிப்பட்டி உட்பட பல கிராமங்களில் புகையிலை பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் புகையிலைக்கு ஆந்திராவில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும் உயர்ரக சுருட்டுகள் தயாரிப்பதற்கு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் இவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் புகையிலை பயிரிடப்பட்டிருந்தது. தற்போது புகையிலை பச்சைபசேல் என நன்கு விளைந்துள்ளது. அசுவினி பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதலிலிருந்து புகையிலையை காப்பாற்ற விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து வருகின்றனர். விளைச்சல் நன்கு உள்ளதால், அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...