×

தனியார் ஊழியரை கத்தியால் வெட்டி வழிப்பறி: 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர், ஜன.11:  கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் படப்பை-ஒரத்தூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரத்தூர் மேம்பாலம் அருகே சென்ற போது இருவர் வாலிபர்கள், சாம்சனை வழிமறித்து கத்தியால் சாம்சனின் கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 200 மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

சாம்சன் படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் சான்சன் புகார் அளித்துள்ளார்.  மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரத்தூர் பகுதியை சேர்ந்த அஜித் (25), வசந்தகுமார் (19) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...