சென்னை: வடசென்னை வளர்ச்சிக்கு மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதி செய்யும்.வடசென்னை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு இது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
