மும்பை : பெற்றோரை பராமரிப்பது நிபந்தனையற்ற சட்டக் கடமை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பெற்றோரை பராமரிப்பது அவர்களிடம் இருந்து சொத்துகளை பெறுவதை தீர்மானிக்காது என்றும் வயது முதிர்ந்த அல்லது உடல்நலம் பாதித்த பெற்றோரை பராமரிக்க மறுப்பது அரசியல் அமைப்பின் அடிப்படையையே தகர்ப்பதாகும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
