×

மெஞ்ஞானபுரம் அருகே சாலை விபத்தில் கட்டிட நிபுணர் பலி

உடன்குடி, ஜன. 7: மெஞ்ஞானபுரம் அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்த கட்டிட நிபுணர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் மருதூர்கரையை சேர்ந்தவர் சாலமோன்(51) வீடு, கட்டிட அலங்கார நிபுணர் (பால்சீலிங்). தற்போது நெல்லை மாவட்டம் திசையன்விளை சமாரியா தெருவில் மனைவி மகன்களுடன் வசித்து வருகிறார்.  

நேற்று முன்தினம் மெஞ்ஞானபுரம் பகுதிக்கு டூவிலரில் வந்த அவர் பணியை முடித்து விட்டு திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தார். கடாட்சபுரம் பகுதியில் செல்லும் போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட டூவிலிரிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Architect ,road accident ,Menjanpuram ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு