×

களக்காடு அருகே தொழிலாளி திடீர் சாவு

களக்காடு, ஜன. 7:    களக்காடு அருகே கட்டிடத் தொழிலாளி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (35). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஜெனிதா (31). தம்பதிக்கு இரு மகள்கள். கோவையில் கடந்த 1 மாதமாக  தங்கியிருந்து வேலை பார்த்துவந்த ஸ்டீபன், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஊர் திரும்பினார். இதனிடையே ஜெனிதா தனது மகள்களுடன் பச்சாந்திரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் சம்பவத்தன்று ஜெனிதா தனது மகள்களுடன் புதூருக்கு திரும்பியபோது வீட்டில் ஸ்டீபன்  திடீரென இறந்துக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Kalakadu ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...