×

காங்கயத்தில் தி.மு.க. கிராம சபை கூட்டம்

காங்கயம், ஜன.7: காங்கயம் நகர தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. காங்கயம் நகரம் 17 வார்டு  வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் மக்கள் கிராம சபை கூட்டமும், ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு எனும் திண்ணை பிரசாரமும் நடைபெற்றது. காங்கயம் கிழக்கு நகர பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு நகர பொறுப்பாளர் காயத்திரி சின்னசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசினார். இதில், அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்கள், கல்வி, சுகாதாரம், பெண்கள் உரிமை பறிப்பு, சமூக நீதி பாதிப்பு ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. அரசை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் நிர்வாகிகள், பொதுமக்களிடமிருந்து பதாகையில் கையெழுத்து பெறப்பட்டது. இக்கூட்டத்தில், நகர நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,council ,Kangayam Village ,meeting ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது