×

மது போதையில் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

அவிநாசி, ஜன.7: அவிநாசி சேவூர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவிநாசி ஒன்றியம் சேவூரில் கைகாட்டி நால்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரு சக்கர வாகன விற்பனை நிலையம், ஒர்க்ஷாப் உள்ளது. இங்கு நேற்று இருசக்கர வாகனம் பழுது நீக்க வந்த 3 பேர், அங்குள்ள ஊழியரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரிடம் விசாரணை நடத்தினர். இதில், சேவூர்  அசநல்லிபாளையத்தை சேர்ந்த நஞ்சப்பன் மகன் கருப்புசாமி (20), ராமசாமி மகன் அஜய் (22), செல்வராஜ் மகன் மனோஜ் (23) என்பதும், 3 பேரும் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : teenagers ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு