பந்தலூர், ஜன.7: பந்தலூர் அருகே தேவாலா அதிகம் மழைப்பெய்யும் இடமாக உள்ளதால் 2வது சிராபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. தேவாலா அருகே மூச்சுக்குன்னு பகுதியில் நீரோடையில் விழும் தண்ணீர் ரம்மியமாக அருவியைபோல் காட்சி தருவதால் சுற்று வட்டார மக்கள் குளித்து மகிழ்வதற்காக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கூடலூர், பந்தலூர் பகுதியில் அதிகளவில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் இதுபோன்ற இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், தமிழக சுற்றுலா துறையினர் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.