×

இரு இளம்பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை

கோவை, ஜன.7: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (29). தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி ருபானா(25). கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.  கார்த்திக் நிறுவனத்திற்கு  வேலைக்கு சென்று விட்ட நிலையில் மதியம் ருபானா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் குக்கரில் விசில் போடாமல் சமையல் செய்துள்ளார். சாப்பாடு கருகி போய் வாசம் வீசியது. இதை பார்த்த ருபானாவின் தாய், திருமணமாகி விட்டது, இப்படி சமையல் செய்தால் எப்படி என கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ருபானா வீட்டில் தூக்கு போட்டு இறந்தார்.இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது. இடையர்பாளையம் நீலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (28). இவருக்கு 5 ஆண்டிற்கு முன் திருமணம் ஆனது. ஒரு மகள் உள்ளார். கணவரை பிரித்து 3 மாதமாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மன விரக்தியில் காணப்பட்ட இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக துடியலூர் போலீசார்விசாரிக்கின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது. செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (38). நகைப்பட்டறை தொழிலாளி. போதுமான வருமானம் கிடைக்காத நிலையில் விரக்தியில் காணப்பட்ட இவர் விஷம் குடித்து இறந்தார்.செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.  சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). பேக்கரி கடை ஊழியர். இவர் குடும்ப பிரச்னையால் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,teenagers ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை