×

அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் மகாராஜன் எம்எல்ஏ உறுதி

ஆண்டிபட்டி, ஜன.7: ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி புதுத்தெரு பகுதியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக எம்எல்ஏ.விடம் வழங்கினர். பின்னர் எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், அரசு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் ஆண்டிபட்டி பகுதியில் பொங்கல் பரிசு 2500 ரூபாயை அரசு அதிகாரிகள் வழங்காமல் அதிமுகவினர் வழங்கி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் பொதுமக்களின் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Maharajan MLA ,government ,DMK ,formation ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...