×

கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் கோரிக்கை

வருசநாடு, ஜன. 7: கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர் புதுக்குளம் கண்மாய், செங்குளம் கண்மாய், கெங்கன்குளம், கோவிலாங்குளம், சிறுகுளம் கண்மாய், கடமான் குளம், பெரியகுளம் கண்மாய்  உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கண்மாய்களில் தனிநபர் பலர் ஆக்கிரமிப்பு செய்து அவற்றில் தென்னை, கொட்டை முந்திரி, இலவமரம் உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இந்த கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சமூகஆர்வலர் அங்குசாமி கூறுகையில்,`` கடமலை- மயிலை ஒன்றியத்தில் ஒரு சில கண்மாய்களில் மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். மீதமுள்ள கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதற்கு  தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Kanmai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...