×

தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

சிவகங்கை, ஜன.7: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட செயலாளர் வீரையா, மாவட்டத் தலைவர் உமாநாத் தலைமை வகித்தனர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியமேரி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்டத் தலைவர் சசிவர்ணம், டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பொதுத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேங்கையா, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க செயலாளர் சமயத்துரை மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். மறியல் செய்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்குடியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி, மாநில துணைச்செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...