×

வாடிப்பட்டி விற்பனை கூடத்தில் ரூ.6.31 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

மதுரை, ஜன. 7: தமிழ்நாடு வேளாண் விற்பனை, வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்குட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில் 14 விவசாயிகளின் 55 ஆயிரத்து 684 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை வகிக்க,  15 வியாபாரிகள் பங்கு பெற்றனர். அதிகபட்ச விலையாக ரூ.15க்கும், குறைந்தபட்சமாக ரூ.8.50க்கும், சராசரியாக ரூ.11.34க்கும் ஏலம் போனது. மேலும் ரூ.6.31 லட்சம் வியாபாரிகளிடமிருந்து பெற்று, விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்ததாக அனைத்து விவசாயிகளும்மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தேங்காய் ஏலம் இனிவரும் வாரங்களில் தற்போது நடக்கும் புதன்கிழமைக்கு பதிலாக செவ்வாய் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.   மேலும் தகவலறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்  மேற்பார்வையாளர் சீனிகுருசாமியை 9600802823 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4.5 லட்சம் தேங்காய்கள் மறைமுக ஏலம் மூலம் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : sales hall ,Vadippatti ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...