×

மதுரையில் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை சாவில் சந்தேகம் என புகார்

மதுரை, ஜன. 7: மதுரை தல்லாகுளம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும் செல்லூர், மீனாம்பாள்புரம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த கங்காதரன் மகள் திவ்யா(23)விற்கும் கடந்த 2018 ஆக.27ல் திருமணம் நடந்தது. தற்போது முத்துக்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யாவிற்கும், முத்துக்குமார் குடும்பத்தில் உள்ளவர்களுக்குமிடையே அடிக்கடி பிரச்னை, தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஜன.4ம் தேதி இரவும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திவ்யா தனது அறையில், சேலையில் தூக்குபோட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, திவ்யாவின் தந்தை கங்காதரன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,teenager ,Madurai ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை