×

இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் கலெக்டரிடம் மனு

மதுரை, ஜன. 7: மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்புலிகள் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் சிங்கப்பாண்டி தலைமையில் மக்கள் வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அன்பழகனிடம் மனு வழங்கினர். அம்மனுவில், ‘அலங்காநல்லூர் ஒன்றியம், ராஜாக்கள்பட்டி ஊராட்சியை சேர்ந்த மறவப்பட்டி காலனியில் சுமார் 100 அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1998ல் இலவச வீட்டுமனை பட்டாவும், மயானக்கரைக்கு இடம் கேட்டும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால், மெயின்ரோட்டில் ஒதுக்குப்புறம்பான இடத்தில் பிணத்தை எரிக்கிறோம். எனவே, இலவச வீட்டு மனைப்பட்டாவும், மயான மேடையும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...