×

புதன் சந்தையில் மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜன.7: நாமக்கல் மாவட்டம் புதன் சந்தையில் வாரம்தோறும் செவ்வாய், புதன் கிழமைகளில் மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். மாட்டுச் சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் வியாபாரிகள் வருகின்றனர். நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால், மாடுகள் விலை உயர்ந்து, கறவை மாடுகள் ₹43 ஆயிரத்துக்கும், இறைச்சி மாடுகள் ₹20 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ₹11 ஆயிரத்துக்கும் விற்பனையானது. மொத்தம் ₹3.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா