நாமக்கல், ஜன.7: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, கோயில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடந்தது. கோயில் ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உண்டியல் காணிக்கையை எண்ணினர். இதில், பக்தர்கள் காணிக்கையாக ₹1 லட்சத்து 85 ஆயிரத்து 730 செலுத்தியிருந்தனர்.