×

கரும்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, ஜன.7: பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை தற்போது அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் விளைச்சல் நன்றாக உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படுவதால், தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கரும்பின் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நடப்பாண்டு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளோம். தற்போது நல்ல விளைச்சல் உள்ளதால், கரும்புகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கரும்பு ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ஒரு கரும்பு ₹40 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்