×

சிஜடியூ தொழிற்சங்கத்தினர் மறியல்

தர்மபுரி, ஜன.7: தர்மபுரி மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, தலைமை தபால் நிலையம் முன் மறியல் நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் நாகராசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் நாகராஜன், கலாவதி, அங்கம்மாள், சண்முகம், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags : unions ,CJTU ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...