×

முன்னாள் எம்பி சித்தமல்லி எஸ்ஜி முருகையன் 42வது நினைவு நாள் அனுசரிப்பு

மன்னார்குடி, ஜன.7: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான எஸ்ஜி முருகையனின் 42வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி மன்னார்குடி அருகே சித்தமல்லி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சித்தமல்லி கடை வீதியில் உள்ள தியாகி எஸ்ஜிஎம் நினைவு கொடிக்கம்பத்தில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, இந்திய கம்யூ., கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீபச்சுடரை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்று தியாகி எஸ்ஜிஎம் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மாலைகள் அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.

இதில், இந்திய கம்யூ., மாநில துணைத்தலைவர் வீரபாண்டியன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், பழனிச்சாமி, உலகநாதன், மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடந்த ரத்ததானம், கண்தான முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் பாவலர் கலைபாரதி யின் “உழைப்பு கொடை சிற்பி-எஸ்ஜி முருகையன் எம்பி” என்ற நூல், அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், முற்போக்கு இயக்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக வந்து தியாகி எஸ்ஜிஎம் நினைவு ஸ்தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தியாகி எஸ்ஜி முருகையனின் மகன்கள் எஸ்ஜிஎம். ரமேஷ், எஸ்ஜிஎம்.லெனின், எஸ்ஜிஎம்.பூபேஷ்குப்தா மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags : Chittamalli ,SG Murugaiyan 42nd Memorial Day Adjustment ,
× RELATED நாகை எம்.பி. செல்வராசுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்