×

கயிறு தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, ஜன.7: கயிறு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்பிற்கு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கு நடப்பாண்டு வழங்கப்பட உள்ள பயிர் தொழில்நுட்ப பயிற்சியில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண், பெண் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 மாதம் உள் பயிற்சியும், 3 மாதம் இன்டர்ன்ஷிப் பயிற்சி என 15 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியின்போது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு விடுதி வசதி செய்து தரப்படும். பயிற்சியில் சேர விண்ணப்ப படிவங்களை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தஞ்சை www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சை&613403 என்ற முகவரியில் வரும் 20ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362&264655 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு