×

புதுக்கோட்டையில் மொபட் திருடிய வாலிபர் கைது

புதுக்கோட்டை, ஜன.7: புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 3ம் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர் தனக்கு சொந்தமான மொபட்டை 4ம் தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். காலை எழுந்து பார்த்த போது, மொபட் திருட்டு போயிருந்தது. இதுபற்றி டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கீழராஜவீதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை நடத்தினர்.  அப்போது சந்தேகப்படும்படி மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஓட்டி வந்தது பாலமுருகனின் மொபட் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், புதுக்கோட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் ஆனந்த் (எ) கட்ட ஆனந்த் (19) என்பது தெரியவந்தது. மேலும் மொபட்டை திருடியதையும் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...