×

பலரை கடித்து குதறிய வெறிநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

அரியலூர், ஜன.7: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வெள்ளூர் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை பால் வாங்க சென்ற தர்ஷினி என்ற சிறுமியை வெறிநாய் கடித்துள்ளது. இதனை தொடர்ந்து விஜயன், குமார், வாலாமணி, திலகவதி ஆகியோரை கடித்து ஓடிய அந்த நாய், வெள்ளையம்மாள் என்ற மூதாட்டியை காலில் கடித்தது. இதனால் கீழே விழுந்த அவரை முகத்தில் கடித்து குதறியது. இதனையடுத்து வெறிநாய் கடித்த நபர்களை செந்துறை, அரியலூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த மூதாட்டியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மனிதர்களை கடித்த வெறிநாய் அக்கிராமத்தில் கட்டியிருந்த மாடுகள், மேய்ந்துக்கொண்டிருந்த ஆடுகள் என பலவற்றை மதியத்திற்குள் கடித்தது. பின்னர் கிராம இளைஞர்கள் அந்த வெறி நாயை அடித்துக்கொன்று புதைத்தனர்.

Tags : Adolescents ,hospital ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...