×

பாடாலூர் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை

பாடாலூர், ஜன.7: பாடாலூர் அருகே விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே உள்ள தொட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(62), கொத்தனார். இவரது மனைவி சரோஜா(55). இவர் கடந்த பத்தாண்டுகளாக கை, கால்கள் வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவர்களுக்கு மாணிக்கராஜ், கோவிந்தராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கண்ணன், சரோஜா இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சரோஜா 10 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தாலும், இதனால் ஏற்பட்டுவந்த தகாராறு காரணமாக விரக்தி ஏற்பட்டு தம்பதி இருவரும் நேற்று மாலை விஷம் குடித்ததில் சம்பவத்தில் இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Badalur ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...