×

பெரம்பலூர் அருகே தனியார் கிரஷரில் தார்பாய்லரில் தீ ரூ.25 ஆயிரம் பொருட்கள் நாசம்

பெரம்பலூர்,ஜன.7:பெரம்பலூர் அருகே தனியார் கிரஷரில் தார்பாய்லரில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரு க்கு, பெரம்பலூர்-அரியலூர் சாலையில், அருமடல்பிரிவுரோடு அருகே கிரஷர் வளாகத்தில் தார்கலவை இயந்திரமும், தார் பாய்லரும் உள்ளது. இந்த தார் பாாய்லரில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் நிலையஅலுவலர் உதயகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து சென்று தண்ணீரைபீச்சி அடித்துத் தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது. இந்தத் தீவிபத்தில் 25ஆயிரம் மதிப்பிலான தார் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.

Tags : fire ,Perambalur ,crusher ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா