×

வேதாரண்யம் அருகே வயலில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்த முதியவர் பலி

வேதாரண்யம், ஜன.7: வேதாரண்யம் அருகே வயலில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார். வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செண்பகராயநல்லூர் கிராமம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் குப்பமுத்து (60). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வசித்து வந்தார். குப்பமுத்துவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி மாலை கடை வீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. காலையில் தேடி பார்த்தபோது அங்குள்ள சாலை அருகே வயல் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்து இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் மதன்மோகன் கொடுத்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Vedaranyam ,field ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்