×

வேதாரண்யம் அருகே பட்டுப்போன தென்னை மரம் விழுந்து ஓட்டு வீடு சேதம்

வேதாரண்யம், ஜன.7: வேதாரண்யம் அடுத்த வேட்டைகாரனிருப்பு பகுதி வெள்ளப்பள்ளம் கச்சவெளி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து அம்மாள் (52). இவர் அங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகே பட்டுப்போன தென்னை மரம் இருந்தது. வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை, காற்றும் வீசி வருவதால் நேற்று முன்தினம் மாலை திடீரென மாரிமுத்து வீட்டருகே உள்ள பட்டுப்போன தென்னை மரம் முறிந்து ஓட்டு வீட்டின் மேல் விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்த தகவல் கிடைத்ததும் வேதாரணியம் தாசில்தார் முருகு மற்றும் வருவாய் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Tags : house ,Vedaranyam ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்