×

மக்கள் பாராட்டு ஆர்டிமலை கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

குளித்தலை, ஜன. 7: தோகைமலை அருகே ஆர்டிமலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பொியநாயகியம்மன் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு தாிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பொியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் காலபைரவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆர்.டி.மலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள்பங்கேற்றனர். இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரிஸ்வரர், டி.எடையபட்டி ரெத்தினகிரிஸ்வரர் ஆகிய கோயில்களில் நடந்த மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Artemis Temple ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு