×

முகவரியில்லா முதியவர் பலி

திருச்சி, ஜன.7: திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே உள்ள கல்லூரி சாலையோரம் உள்ள பஸ் நிறுத்தத்தில் 50 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் கடந்த 4ம் தேதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்பகுதியினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த எ.புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தகவல் தெரிந்தவர்கள் எ.புதூர் காவல் நிலைய எண் 0431-2471598 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு