×

விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.6: அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக காலமுறை ஊதியம் வழங்க கோரி திருவாரூர் தாலுகா அலுவலகம் முன் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15 ஆயிரத்து 700 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். பொங்கல் போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். பதவி உயர்விற்கான ஆண்டுகளை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மணல் கடத்தல் தடுப்பு பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத் தலைவர் அப்பாசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் ஜெயபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Village assistants ,
× RELATED 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299...