பாபநாசம், ஜன. 6: பண்டாரவாடை வடக்கு தச்சன் தெருவில் மின்கம்பியில் உரசிய மரக்கிளைகள் தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது. பாபநாசம் அருகே பண்டாரவாடை வடக்கு தச்சன் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில் ரேஷன் கடை, தபால் அலுவலகம் உள்ளன. இந்த தெருவில் வளர்ந்திருந்த மரத்தின் கிளைகள் அவ்வழியே சென்ற மின் கம்பிகள் மீது உரசியப்படி இருந்தன. காற்றின் வேகத்தில் மரத்தின் கிளைகள் உரசி மின் கம்பி அறுந்து விழுந்தால் விபத்து நேரும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.